(1)
காதலர் இதயம் இரண்டும்
இடம் மாறின.
மருத்துவ அறிவியல்
மலைத்து நின்றது.
(2)
இந்த நொடியில்
உந்தன் சிந்தையில்
ஓடும் எண்ணம்
என்னவென்று கூறடி
எனதன்பு தோழி !
என் சிந்தை முழுவதும்
சிறைப்பட்டுக் கிடப்பதால்
எண்ணம் எதற்கும்
இடம் இல்லையே தோழி !
(3)
மறப்பதும் ஏனோ?
ஊன் உறக்கம்
துறப்பதும் ஏனோ ?
கூறடி இனியவளே !
உன் வினாவுக்கு
விடை தருவேன்
எனதருமை
சிநேகிதியே !
நேச மழையில்
நனைந்தேன்
பாச வலையில்
விழுந்தேன்
இதயத்துக்குள்
சிறைப்பட்டேன்
அன்புக் கோட்டைக்குள்
அடைபட்டேன்
ஆதரவு அரணால்
சூழப்பட்டேன்
அரவணைப்பு சங்கிலியால்
பிணைக்கப்பட்டேன்
நினைவேதும் இல்லாமல்
கனவில் மிதக்கின்றேன்
கற்பனை உலகில்
உலவுகிறேன்
(4)
உந்தன் சிந்தையில்
ஓடும் எண்ணம்
என்னவென்று கூறடி
எனதன்பு தோழி !
என் சிந்தை முழுவதும்
சிறைப்பட்டுக் கிடப்பதால்
எண்ணம் எதற்கும்
இடம் இல்லையே தோழி !
இந்தக் கணத்தில்
உன் கண்ணில்
ஆடும் காட்சி
என்னவென்று இயம்படி
என் இனிய தோழி !
என் விழி இரண்டும்
இமை மூடி நிற்பதால்
காட்சி எதையும்
காணவில்லையே தோழி !
சுற்றிலும் நடப்பதில்
பற்றின்றி உலகைமறப்பதும் ஏனோ?
ஊன் உறக்கம்
துறப்பதும் ஏனோ ?
கூறடி இனியவளே !
உன் வினாவுக்கு
விடை தருவேன்
எனதருமை
சிநேகிதியே !
நேச மழையில்
நனைந்தேன்
பாச வலையில்
விழுந்தேன்
இதயத்துக்குள்
சிறைப்பட்டேன்
அன்புக் கோட்டைக்குள்
அடைபட்டேன்
ஆதரவு அரணால்
சூழப்பட்டேன்
அரவணைப்பு சங்கிலியால்
பிணைக்கப்பட்டேன்
நினைவேதும் இல்லாமல்
கனவில் மிதக்கின்றேன்
கற்பனை உலகில்
உலவுகிறேன்
(4)
தோழி:
இதயத்தை இழந்தேன்
என்பவளே ! அதை
இழந்ததெப்படி என
நினைவுபடுத்திக் கூறடி !
அது எடுததுக்கொள்ளப்பட்டதா
அல்லது நீயே
கொடுத்துவிட்டாயா?
தலைவி:
என்ன நடந்ததென்று
எனக்கே தெரியவில்ல
பறித்துச் செல்லப்பட்டதா
அல்லது நானே கொடுத்தேனா
என அறுதியிட்டுக் கூற
என்னால் இயலவில்லையே
என் செய்வேன் தோழி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக